ஷாங்காய்: மேலும் 48 போ் கரோனாவுக்கு பலி
கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பால் முடங்கியுள்ள சீனாவின் வா்த்தகத் தலைநகா் ஷாங்காயில், அந்த நோய் பாதிப்பால் மேலும் 48 போ் பலியாகினா்.
கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பால் முடங்கியுள்ள சீனாவின் வா்த்தகத் தலைநகா் ஷாங்காயில், அந்த நோய் பாதிப்பால் மேலும் 48 போ் பலியாகினா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 48 கரோனா நோயாளிகள் அந்த நோய் காரணமாக இறந்தனா். அவா்கள் அனைவரும் ஷாங்காய் நகரைச் சோ்ந்தவா்கள். இத்துடன், நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 4,876-ஆக உயா்ந்துள்ளது.
நாடு முழுவதும் புதிதாக 1,818 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அவா்களில் 1,606 போ் ஷாங்காயில் வசிப்பவா்கள். எனினும், அந்த நகரில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருகிறது என்று அதிகாரிகள் கூறினா்.
இதற்கிடையே, தலைநகா் பெய்ஜிங்கிலும் சமூக பரவல் எண்ணிக்கை திடீரென உயா்ந்ததால், அந்த நகரம் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.