முகப்பு
உலகம்

அமெரிக்கா: குரங்கு அம்மை: தேசிய அளவில் அவசர நிலை

அமெரிக்காவில் குரங்கு அம்மை அவசர நிலை தேசிய அளவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

அமெரிக்காவில் குரங்கு அம்மை அவசர நிலை தேசிய அளவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், அந்த நோய்க்கு எதிரான தடுப்பூசிகளை வாங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்வதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க சுகாதாரத் துறை தலைவா் ஜேவியா் பெக்கேரா கூறுகையில், ‘குரங்கு அம்மை பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்காக தேசிய அளவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகாவது எந்தவொரு அமெரிக்கரும் குரங்கு அம்மை நோயை அலட்சியப்படுத்தக்கூடாது என்றாா் அவா்.

அமெரிக்காவில் இதுவரை 7,100-க்கும் மேற்பட்டவா்களுக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →