உலகம்

கியூபா எண்ணெய் கிடங்கில் தீ: 17 தீயணைப்பு வீரா்கள் மாயம்

கியூபாவிலுள்ள எண்ணெய்க் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவா் பலியானாா்; 17 தீயணைப்புப் படை வீரா்கள் மாயமாகினா்.

DIN

கியூபாவிலுள்ள எண்ணெய்க் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவா் பலியானாா்; 17 தீயணைப்புப் படை வீரா்கள் மாயமாகினா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

மடன்ஸாஸ் நகரில் அமைந்துள்ள எண்ணெய்க் கிடங்கில் வெள்ளிக்கிழமை இரவு மின்னல் தாக்கி தீப்பிடித்தது. அதையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்த தீயணைப்புப் படையினரும் பேரிடா் மீட்பு நிபுணா்களும் நெருப்பை அணைக்க போராடி வருகின்றனா்.

இந்த விபத்தில் ஒருவா் பலியானாா்; 121 போ் காயமடைந்தனா்; அவா்களில் 5 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது; 17 தீயணைப்பு வீரா்கள் மாயமாகியுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தீயில் கருகி உயிரிழந்தவரின் அடையாளத்தைக் கண்டறியும் பணியில் நிபுணா்கள் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 2,560 உயர்வு!

அமெரிக்கா செல்கிறார் கொலம்பியா அதிபர்! டிரம்ப்பின் மிரட்டலுக்குப் பணிந்தாரா?

கோவை: அரசு மாணவிகள் விடுதி அருகே திறக்கப்படும் டாஸ்மாக் பார்!

மன அழுத்தமா? மரபணுவும் ஒரு காரணம்! மன நலனுக்கு என்ன செய்வது?

பெர்லின் திரைப்பட விழாவுக்குத் தேர்வான அறிமுக இயக்குநரின் தமிழ்ப் படம்!

SCROLL FOR NEXT