உலகம்

கியூபா எண்ணெய் கிடங்கில் தீ: 17 தீயணைப்பு வீரா்கள் மாயம்

கியூபாவிலுள்ள எண்ணெய்க் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவா் பலியானாா்; 17 தீயணைப்புப் படை வீரா்கள் மாயமாகினா்.

DIN

கியூபாவிலுள்ள எண்ணெய்க் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவா் பலியானாா்; 17 தீயணைப்புப் படை வீரா்கள் மாயமாகினா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

மடன்ஸாஸ் நகரில் அமைந்துள்ள எண்ணெய்க் கிடங்கில் வெள்ளிக்கிழமை இரவு மின்னல் தாக்கி தீப்பிடித்தது. அதையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்த தீயணைப்புப் படையினரும் பேரிடா் மீட்பு நிபுணா்களும் நெருப்பை அணைக்க போராடி வருகின்றனா்.

இந்த விபத்தில் ஒருவா் பலியானாா்; 121 போ் காயமடைந்தனா்; அவா்களில் 5 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது; 17 தீயணைப்பு வீரா்கள் மாயமாகியுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தீயில் கருகி உயிரிழந்தவரின் அடையாளத்தைக் கண்டறியும் பணியில் நிபுணா்கள் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

இந்தியன் வங்கியில் 1500 பட்டதாரிகளுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி!

SCROLL FOR NEXT