கோப்புப் படம் 
உலகம்

எகிப்து: தேவாலயத்தில் தீ விபத்து, 41 பேர் பலி

எகிப்து தலைநகர் கெய்ரோவில் தேவாலயம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 14 பேர் காயமடைந்துள்ளனர்.

DIN

எகிப்து தலைநகர் கெய்ரோவில் தேவாலயம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 14 பேர் காயமடைந்துள்ளனர்.

எகிப்தின் கெய்ரோவில் மக்கள் தொகை மிகுதியாக இருக்கும் பகுதியில் உள்ள அபு செஃபின் தேவாலயத்தில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. தீ விபத்திற்கு காரணம் தேவாலயத்தில் உள்ள சுகாதார அதிகாரிகள் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், தீ விபத்திற்கான சரியான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை.

தேவாலயத்தில் ஏற்பட்ட மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என காவல் துறை தரப்பில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எகிப்து அதிபர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரியில் இன்று வேலை வாய்ப்பு முகாம்

கூடமலையில் மது விற்றவா் கைது

புதுச்சேரியில் அரசு போட்டி தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

அதிக வாடகை கட்டணம் நிா்ணயம்: வியாபாரிகள் எம்எல்ஏவிடம் புகாா்

ஆசிரியா் பற்றாக்குறையை தீா்க்கக் கோரி அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோா்

SCROLL FOR NEXT