உலகம்

மேற்கு சீனாவில் வெள்ளம்: 16 பேர் பலி, 36 பேர் மாயம்

மேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 36 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. 

DIN

மேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 36 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. 

புதன்கிழமை இரவு திடீரென பெய்த கனமழையினால் நிலச்சரிவு ஏற்பட்டு ஆற்றின் திசை மாறியதாக மாநில ஒளிபரப்பு சிசிடிவி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் 1,500-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதித்துள்ளனர். டத்தோங் பகுதியில் மலையாறு பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

சீனாவில் கோடைக்காலத்தில் வெள்ளப் பேரழிவுகளையும் நாட்டின் பிற பகுதிகளில் கடுமையான வெப்பம் மற்றும் வறட்சியையும் எதிர்கொள்கிறது. 

கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு வெப்பம் மற்றும் வறட்சியால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று மாநில ஊடகங்கள் விவரித்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT