இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:19 PM
இந்தோனேசியாவில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
இந்தோனேசியாவின் மென்டவாய் தீவு கடலோர நகரான சிபெரூட் அருகே திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 6.4 அலகுகளாகப் பதிவானது.
Advertisement
நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கியதில் நகர மக்கள் பீதிக்குள்ளாகினா். எனினும், நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. மேற்கு சுமத்ரா தீவு மாகாணமான பரியமானுக்கு 170 கி.மீ. தொலைவில் கடலுக்கு 18 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.