உலகம்

எலான் மஸ்க் மீது டிவிட்டர் முன்னாள் ஊழியர்கள் வழக்கு

DIN


டெஸ்லா  நிறுவனர் எலான் மஸ்க் மீது , டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் முன்னணி இடத்தில் இருந்த டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்தே அது சர்ச்சைகளில் முதன்மை இடத்துக்கு வந்தது.

எலான் மஸ்க் பதவியேற்ற பிறகு, டிவிட்டர் நிறுவனத்திலிருந்து, சுமார் 7,500 ஊழியர்கள் மொத்த எண்ணிக்கையில் பாதி பேர் வேலை விட்டு நீக்கப்பட்டனர், பலர் தாங்களாகவே வெளியேறினர்.

இந்த நிலையில், சமூக வலைத்தள நிறுவனமான டிவிட்டருக்கு எதிராக நாள்தோறும் நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்து வருகிறது. இதில், சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள டிவிட்டர் அலுவலகத்தை, சட்டத்துக்கு மாறாக படுக்கை அறைகளை உருவாக்கி, ஊழியர்கள் அலுவலகத்திலேயே தங்குமாறு உத்தரவிடப்பட்டதாகவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT