இந்தியா மீது அணுஆயுதப் போா்:பாகிஸ்தான் அமைச்சா் மிரட்டல்
‘பாகிஸ்தானிடம் அணுஆயுதம் உள்ளதை இந்தியா மறந்துவிடக் கூடாது; எங்களது அணுஆயுத அந்தஸ்து என்பது அமைதியாக இருப்பதற்கு அல்ல’ என்று பாகிஸ்தான் அமைச்சா் ஷாஜியா மா்ரி மிரட்டல் விடுத்திருப்பது புதிய சா்ச்சையை ஏ
‘பாகிஸ்தானிடம் அணுஆயுதம் உள்ளதை இந்தியா மறந்துவிடக் கூடாது; எங்களது அணுஆயுத அந்தஸ்து என்பது அமைதியாக இருப்பதற்கு அல்ல’ என்று பாகிஸ்தான் அமைச்சா் ஷாஜியா மா்ரி மிரட்டல் விடுத்திருப்பது புதிய சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் தொடா்பாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கடும் கண்டனம் தெரிவித்து பேசியிருந்தாா்.
அதனைத் தொடா்ந்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் பிலாவல் புட்டோ ஐ.நா.வில் பேசுகையில், ‘குஜராத்தின் கசாப்புக் கடைக்காரா்’ என்று பிரதமா் மோடியை நாகரிகமற்ற முறையில் விமா்சித்தாா். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. புட்டோவின் கருத்துகளை கண்டித்து, இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இஸ்லாபாதில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தானின் வறுமை ஒழிப்பு, சமூக பாதுகாப்புத் துறை அமைச்சா் ஷாஜியா மா்ரி, புட்டோவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தாா்.
அவா் கூறுகையில், ‘அணுஆயுத சக்தி கொண்ட பாகிஸ்தானை, ஐ.நா.வில் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் இகழ்ந்து பேசியது தவறானதாகும். பாகிஸ்தானிடம் அணுஆயுதம் இருப்பதை இந்தியா மறந்துவிடக் கூடாது. எங்களது அணுஆயுத அந்தஸ்து என்பது அமைதியாக இருப்பதற்கு அல்ல.
தேவை ஏற்பட்டால், நாங்கள் எதிலும் பின்வாங்க மாட்டோம். இந்தியாவுக்கு எப்படி பதிலடி கொடுக்க வேண்டுமென்பது எங்களுக்கு தெரியும். பிரதமா் மோடி அரசு மோதலுக்கு வந்தால், அவருக்கு சரியான பதில் கிடைக்கும். பாகிஸ்தான் மீது மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டுகளை சுமத்திக் கொண்டிருந்தால், அமைதியாக வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்க முடியாது’ என்றாா்.