உண்மையை அறியாதவர்கள்
உடலாகிய பண்டத்தினது அசுத்தமான தன்மையை அற்ப அறிவினர் ஒருபோதும் அறியமாட்டார்கள்.
பண்டம் அறியார், படுசாந்தும் கோதையும்
கண்டு, பாராட்டுவார் கண்டிலர்கொல்-மண்டிப்
பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தும்
முடைச்சாகா டச்சிற் றுழி?
(பாடல் 48 அதிகாரம்: தூய்து அன்மை)
உடலாகிய பண்டத்தினது அசுத்தமான தன்மையை அற்ப அறிவினர் ஒருபோதும் அறியமாட்டார்கள்.
சந்தனத்தைப் பூசிக்கொண்டும், பூமாலையைச் சூடிக் கொண்டும் விளங்கும் அதனைப் போற்றிப் பாராட்டுவார்கள். பெட்டையும் ஆணும் ஆகிய வன்மையான கழுகுகள் திரண்டு கூடிப் பெயர்த்துப் பெயர்த்துக்குத்துகின்ற, முடை நாற்றம் உடைய வண்டியாகிய உடம்பின் அச்சாகிய உயிர் அற்றுப் போகின்ற தன்மையைக் கண்டும் இவர்கள் உண்மையை அறியார்களோ? "உயிரற்ற உடலைக் கழுகுகள் கூடிக்குத்தியுண்பதை அறிந்தும் மனிதர்கள் அதைப் பாராட்டுகின்றார்களே?