உலகம்

பாகிஸ்தானில் 2 ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 15 பயங்கரவாதிகள், 4 வீரர்கள் பலி

DIN

பாகிஸ்தானில் 2 ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள இரண்டு ராணுவ முகாம்கள் மீது பங்கரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவங்களில் 4 ராணவ வீரர்கள் பலியானார்கள். 15 பயங்கரவாதிகள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். 

இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷித் கூறுகையில், புதன்கிழமை மாலை பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள இரண்டு ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர். ஒரு முகாம் நௌஷ்கி நகருக்கு அருகிலும் மற்றொன்று பஞ்ச்கூர் மாவட்டத்திலும் அமைந்துள்ளது.

இரண்டு பயங்கரவாதத் தாக்குதல்களையும் பாகிஸ்தான் ராணுவம் வெற்றிகரமாக முறியடித்ததாகவும், நௌஷ்கியில் ஒன்பது பயங்கரவாதிகளையும், பஞ்ச்கூரில் மேலும் ஆறு பயங்கரவாதிகளையும் ராணுவத்தினர் கொன்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

SCROLL FOR NEXT