உலகம்

முதல் முறையாக முகநூல் சந்தித்த சரிவுக்கு இந்தியா காரணமா? மெட்டா சொல்லும் ரகசியம்

DIN

இந்தியாவில் செல்லிடப்பேசி ரீசார்ஜ் கட்டண உயர்வே சமூக வலைத்தளங்களில் ஜாம்பவானாகத் திகழும் முகநூல் பக்கம், முதல் முறையாக சரிவை எதிர்கொள்ளக் காரணம் என்று மெட்டா தெரிவித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மெட்டா என்று பெயரிடப்பட்டிருக்கும் முகநூல் நிறுவனம், லாபத்தில் 8 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது அந்த நிறுவனம் தொடங்கப்பட்டு 18 ஆண்டுகளில் சந்திக்கும் முதல் வீழ்ச்சி.

முகநூல் பயனாளர்களின் எண்ணிக்கையில், கடந்த காலாண்டில் சரிவு ஏற்பட்டதே இதற்குக் காரணம். ஆசிய - பசிபிக் நாடுகள் மற்றும் உலகின் இதர நாடுகளிலும் கரோனா பாதிப்பு அதிகரித்ததும், பயனாளர்களின் எண்ணிக்கைக் குறைந்ததற்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படும் அதே நிலையில், இந்தியாவில், இணையப் பயன்பாட்டுக்கான செல்லிடப்பேசி கட்டணங்கள் கடந்த டிசம்பரில் உயர்த்தப்பட்டதும், காரணமாகக் கூறப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதத்தில், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறவனங்கள் அனைத்தும், செல்லிடப்பேசி ரீசார்ஜ் கட்டணத்தை 18 முதல் 25 சதவீதம் உயர்த்தி அறிவித்தன. இந்த நிலையில்தான், டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெற்ற காலாண்டில், மெட்டாவின் லாபம் 8 சதவீதம் அதாவது இந்திய ரூபாயில் ரூ.76,800 ஆகக் குறைந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதேக் காலாண்டில் ரூ.83,800 கோடியாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், போட்டி நிறுவனங்களின் பயனாளர்கள் அதிகரிப்பு, ஆப்பிள் ஃபோன்களில் தனிநபர் விதிகளில் மாற்றம் போன்ற காரணிகளால் முகநூல் பயனாளர்களின் வருகை குறைந்திருப்பதாக மெடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT