உலகம்

சோமாலியாவில் கண்ணிவெடி தாக்குதல்: 10 பேர் பலி

DIN

தெற்கு சோமாலியாவில் மினி வேன் மீது கண்ணிவெடி தாக்கப்பட்டதில் 5 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர். 

தெற்கு சோமாலியாவில், ஜூபாலஷ்ட் மாநிலத்தில் உள்ள ராணுவ தளபதி டிகோவ் அப்டினூர் ஏடன், பயணிகள் பேருந்து தெற்கு துறைமுக நகரமான கிஸ்மாயோவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது கண்ணிவெடியால் தாக்கப்பட்டதாகக் கூறினார். 

தீவிரவாதிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கிஸ்மாயோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கண்ணிவெடி வெடித்த நேரத்தில் ஜூபாலண்ட் மாநிலப் படைகள் அல்-ஷபாப் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டதாக ஏடன் கூறினார், 

மேலும், கிஸ்மாயோவின் வடக்கில் நடந்த நடவடிக்கையின் போது இரண்டு வீரர்கள் காயம் அடைந்ததாகத் தெரிவித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT