முகப்பு
உலகம்

கிழக்கு நாடுகளின் பாதுகாப்பிற்கு படைகளை அனுப்பும் நேட்டோ

உக்ரைனை ரஷிய படைகள் ஆக்கிரமித்து வரும் நிலையில், கூட்டணியில் கிழக்கு நாடுகளுக்கு கூடுதல் படைகளை அனுப்பவுள்ளதாக நேட்டோ தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
கோப்புப்படம்
பகிர்:

உக்ரைனை ரஷிய படைகள் ஆக்கிரமித்து வரும் நிலையில், கூட்டணியில் கிழக்கு நாடுகளுக்கு கூடுதல் படைகளை அனுப்பவுள்ளதாக நேட்டோ தெரிவித்துள்ளது.

ரஷியாவின் முப்படைகளும் இரண்டாவது நாளாக உக்ரைன் நாட்டை தாக்கி வருகின்றனர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் கீவ்வில் ரஷியப் படைகள் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேட்டோ கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனைக்கு பிறகு நேட்டோ தலைவர்களின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கூறியிருப்பதாவது:

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ரஷியாவின் தாக்குதலை கண்டிக்கின்றோம். உடனடியாக தாக்குதலை நிறுத்திவிட்டு ஆக்கிரமிப்புகளிலிருந்து ரஷிய ராணுவத்தினர் வெளியேற வேண்டும்.

உக்ரைன் தொடர்ந்து தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் அந்நாட்டிற்கு தேவையான அனைத்தையும் வழங்குவோம். மற்றவர்களை உதவ அழைப்போம். 

நேட்டோ கூட்டணி நாடுகளின் பாதுகாப்பை கருதி கிழக்குப் பகுதிகளில் உள்ள நாடுகளுக்கு கூடுதல் தற்காப்புப் படைகளை அனுப்புகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →