முகப்பு
உலகம்

'போர் வேண்டாம்; அமைதி வேண்டும்' - வீதிகளில் இறங்கி ரஷிய மக்கள் போராட்டம்

'உக்ரைனுடன் போர் வேண்டாம்' என ஆயிரக்கணக்கான ரஷிய மக்கள் சாலைகளில், தெருக்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Updated On : 25 பிப்ரவரி, 2022 at 12:53 PM
பகிர்:

'உக்ரைனுடன் போர் வேண்டாம்' என ஆயிரக்கணக்கான ரஷிய மக்கள் சாலைகளில், தெருக்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது நேற்று போர் தொடுக்கத் தொடங்கியது. ரஷியா தாக்குதலில் உக்ரைன் நிலைகுலைந்துள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு ஐ.நா. அமைப்பு மற்றும் பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

Advertisement

இந்நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, போருக்கு எதிராக ரஷியாவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ரஷியாவில் தலைநகர் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

'போர் வேண்டாம்', 'உக்ரேனியர்களுடன் ஒற்றுமை பாராட்டுவோம்', 'உலக அமைதி வேண்டும்' என்று பதாகை மற்றும் கோஷங்களுடன் போரிட்டு வருகின்றனர். போருக்கு எதிரான ரஷிய மக்களின் போராட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.