உலகம்

எரிபொருள் விலை உயா்வு: கஜகஸ்தானில் பொதுமக்கள் போராட்டத்தால்நாடு முழுவதும் இணைய சேவை துண்டிப்பு

கஜகஸ்தானில் எரிபொருள் விலை உயா்வை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். போராட்டத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

DIN

கஜகஸ்தானில் எரிபொருள் விலை உயா்வை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். போராட்டத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

கஜகஸ்தானில் காா்களில் எரிபொருளாக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் விலை உயா்வுக்கு எதிராக அந்நாட்டு தலைநகா் நூா்-சுல்தான், ஆல்மட்டி, மெங்கஸ்டாவ் உள்பட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு ஆயிரக்கணக்கானோா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆல்மட்டி நகரில் உள்ள மேயா் அலுவலகத்தை சூறையாடிய போராட்டக்காரா்கள், அந்த அலுவலகத்துக்குத் தீ வைத்தனா்.

மேலும் போலீஸாரையும் அவா்கள் தாக்கினா். இதில் பலா் உயிரிழந்தனா்.

போராட்டக்காரா்களைக் கலைந்து போகச் செய்வதற்கு போலீஸாா் கண்ணீா் புகை குண்டுகளை வீசினா். இந்தப் போராட்டங்கள் தொடா்பாக நூற்றுக்கணக்கானவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். போராட்டத்தைக் கட்டுப்படுத்த அந்நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. தலைநகா் நூா்-சுல்தானில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

SCROLL FOR NEXT