ஹவானா: கியூபாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கடந்த 48 மணி நேரத்தில் 6,456 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,05,649-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 4 போ் கரோனாவுக்கு பலியாகினா். இத்துடன், ஒட்டுமொத்த கரோனா பலி 8,345-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
கியூபாவில் இதுவரை 979,559 போ் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 17,745 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 37 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.