இலங்கை அதிபராகிறார் நாடாளுமன்ற அவைத் தலைவர்? 
உலகம்

இலங்கை அதிபராகிறார் நாடாளுமன்ற அவைத் தலைவர்?

இலங்கை அதிபராக இருக்கும் கோத்தபய ராஜபட்ச பதவி விலகினால், அந்நாட்டு அரசியல் அமைப்பு விதிகளின்படி, நாடாளுமன்ற அவைத் தலைவர் தற்காலிக அதிபராக பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

DIN


இலங்கை அதிபராக இருக்கும் கோத்தபய ராஜபட்ச பதவி விலகினால், அந்நாட்டு அரசியல் அமைப்பு விதிகளின்படி, நாடாளுமன்ற அவைத் தலைவர் தற்காலிக அதிபராக பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில், அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்திருக்கும் நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று  நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் வலியுறுத்தியுள்ளனர்.

அது மட்டுமல்லாமல், இலங்கையில், அனைத்துக் கட்சி அரசை அமைக்கவும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதன்படி, அதிபர் கோத்தபய தனது பதவியை விடடு விலகினால், அந்நாட்டு அரசியலமைப்பு விதிகளின்படி, நாடாளுமன்ற அவைத் தலைவர் அபேவர்தன அதிபராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச ராணுவ முகாமில் பலத்த பாதுகாப்புடன் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT