உலகம்

தப்பியோடிய அதிபர்: பதவி விலகுகிறாரா இலங்கை பிரதமர்?

DIN

இலங்கையில் மக்கள் புரட்சியை வெடித்ததையடுத்து அதிபர் கோத்தபய ராஜபட்ச தப்பியோடிய நிலையில் நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தைக் கூட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக அந்நாட்டில் மக்கள் தங்களது அத்தியாவசிய சேவையை பெறுவதற்கு கூட மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். உணவுப் பொருள்கள் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டவைகளால் நிலைமை நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது. 

இந்நிலையில் சனிக்கிழமை அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபட்ச கொழும்புவில் இருந்த கப்பலில் தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டின் நாடாளுமன்ற அவசரக் கூட்டத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேரவைத் தலைவரைக் கேட்டுக் கொண்டுள்ளார். 

அனைத்து தரப்பினரும் இணைந்து நிலைமையை சரிசெய்யவும் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை நிராகரித்துள்ள எதிர்க்கட்சிகள் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

SCROLL FOR NEXT