உலகம்

பிலிப்பின்ஸ் நிலநடுக்கம்: 150 பேர் காயம், 450 கட்டடங்கள் சேதம்

பிலிப்பின்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 5 பேர் பலியானதோடு 150 பேர் காயமடைந்துள்ளனர்.

DIN

பிலிப்பின்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 5 பேர் பலியானதோடு 150 பேர் காயமடைந்துள்ளனர்.

வடக்கு பிலிப்பின்ஸ்ஸில் உள்ள அப்ரா மாகாணத்தின் முக்கிய நகரங்களிலும் தலைநகர் மணிலாவிலும் நேற்று புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்நிலையில், ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை 5 பேர் பலியானதோடு 150 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 450-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமாகியுள்ளன என்றும் அம்மாகாண அரசு தெரிவித்துள்ளது. 

முன்னதாக, பிலிப்பின்ஸில் கடந்த 1990 ஆம் ஆண்டு பதிவான 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,000 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருங்காட்சியகமான வேளாண் கூட்டுறவு சங்கம்!

விழா நாள்களில் பூக்கும்

பாசிப்பருப்பு இனிப்பு உருண்டை

கரூர் பலி: அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு!

நவராத்திரியும் கொலுவும்!

SCROLL FOR NEXT