உலகம்

இலங்கையில் அடுத்த 3 நாள்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் இல்லை!

DIN

இலங்கையில் அடுத்த 3 நாள்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இல்லை என உள்நாட்டு எரிவாயு விநியோக நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு, உணவுத் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது. 

இந்நிலையில், இலங்கையில் அடுத்த 3 நாள்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இருக்காது என்று அந்த நாட்டு எரிபொருள் விநியோக நிறுவனமான 'லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட்'  தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த செவ்வாய்கிழமை இலங்கைக்கு வந்த சிலிண்டர்கள் கடைசி இருப்பை நேற்று நிறுவனம் விநியோகித்துள்ளது. அதன்படி, ஜூன் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மொத்தமாக 16,000 சிலிண்டர்கள் விற்கப்பட்டுள்ளன. 

இதையடுத்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வருகிற ஞாயிறு அன்று இலங்கையை வந்தடையும், இதனால் சிலிண்டர் விநியோகம் வருகிற செவ்வாய்க்கிழமை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் எரிவாயுவுக்காக பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT