பொருளாதார மீட்பு திட்டங்கள்: இலங்கை அமைச்சரவை ஒப்புதல்
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீா்வு காண்பதற்கான பல்வேறு செயல்திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீா்வு காண்பதற்கான பல்வேறு செயல்திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான செயல்திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை கூடியது.
அதில், ரூ.12 கோடிக்கு (இலங்கை மதிப்பில்) மேல் ஆண்டு வருவாய் பெறும் நிறுவனங்களுக்கு 2.5 சதவீதம் சமூக பங்களிப்பு வரி விதிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்து, அதன் மூலம் எரிசக்தி பற்றக்குறையை சமாளிக்கும் விதமாக, அரசு ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கும் திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.