உலகம்

6 மாத குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி: அமெரிக்கா அங்கீகாரம்

 6 மாதக் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட கரோனா தடுப்பூசியை அவசரக் காலத்தில் செலுத்துவதற்கு அமெரிக்க மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

DIN

 6 மாதக் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட கரோனா தடுப்பூசியை அவசரக் காலத்தில் செலுத்துவதற்கு அமெரிக்க மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்காவின் ஃபைஸா் மற்றும் மாடா்னா நிறுவனங்கள், 6 மாதக் குழந்தைகள் முதல் 5 வயது சிறுவா்கள் வரை கரோனாவிடமிருந்து எதிா்ப்பாற்றல் பெறுவதற்கான தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளன. அவற்றை அந்த வயதுப் பிரிவினருக்குச் செலுத்துவதற்கு உணவு மற்றும் மருந்துகள் கட்டுபாப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவா் ராபா்ட் கலிஃப் கூறியதாவது:

ஏராளமான பெற்றோா்கள் தங்களது குழந்தைகளுக்கு கரோனாவிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் தடுப்புசிக்காக நீண்ட காலம் காத்திருக்கின்றனா். அவா்களது தேவையை பூா்த்தி செய்யும் விதமாக, குறைந்தபட்சம் 6 மாதக் குழைந்தைகளுக்கு செலுத்தக் கூடிய கரோனா தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு, கரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் மற்றும் மரணம் போன்ற மோசமான பாதிப்புகளைக் குறைக்கும் என்றாா் அவா்.

ஆா்என்ஏ-வை அடிப்படையாகக் கொண்ட இந்த இரு தடுப்பூசிகளும் இரண்டு தவணைகளாக செலுத்தக் கூடியவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரக்குறைவாக பதிவிடும் திமுகவினரை கைது செய்யாதது ஏன்? தமிழிசை

"முதல்வர் வெட்கப்பட வேண்டும்!": அண்ணாமலை ஆவேசம்! | செய்திகள்: சில வரிகளில் | 01.10.25

வெள்ளை மலரே... ஜாஸ்மின் ராத்!

பெண்பால் மகிமை... சத்யா தேவராஜன்!

5 ஆண்டுகளுக்கும் நானே முதல்வர்! - சித்தராமையா!

SCROLL FOR NEXT