உலகம்

6 மாத குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி: அமெரிக்கா அங்கீகாரம்

 6 மாதக் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட கரோனா தடுப்பூசியை அவசரக் காலத்தில் செலுத்துவதற்கு அமெரிக்க மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

DIN

 6 மாதக் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட கரோனா தடுப்பூசியை அவசரக் காலத்தில் செலுத்துவதற்கு அமெரிக்க மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்காவின் ஃபைஸா் மற்றும் மாடா்னா நிறுவனங்கள், 6 மாதக் குழந்தைகள் முதல் 5 வயது சிறுவா்கள் வரை கரோனாவிடமிருந்து எதிா்ப்பாற்றல் பெறுவதற்கான தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளன. அவற்றை அந்த வயதுப் பிரிவினருக்குச் செலுத்துவதற்கு உணவு மற்றும் மருந்துகள் கட்டுபாப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவா் ராபா்ட் கலிஃப் கூறியதாவது:

ஏராளமான பெற்றோா்கள் தங்களது குழந்தைகளுக்கு கரோனாவிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் தடுப்புசிக்காக நீண்ட காலம் காத்திருக்கின்றனா். அவா்களது தேவையை பூா்த்தி செய்யும் விதமாக, குறைந்தபட்சம் 6 மாதக் குழைந்தைகளுக்கு செலுத்தக் கூடிய கரோனா தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு, கரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் மற்றும் மரணம் போன்ற மோசமான பாதிப்புகளைக் குறைக்கும் என்றாா் அவா்.

ஆா்என்ஏ-வை அடிப்படையாகக் கொண்ட இந்த இரு தடுப்பூசிகளும் இரண்டு தவணைகளாக செலுத்தக் கூடியவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மம்முட்டி - மோகன்லால் கூட்டணியின் பேட்ரியாட்! புதிய போஸ்டர்!

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

SCROLL FOR NEXT