முகப்பு
உலகம்

சிரியாவில் பேருந்து மீது தாக்குதல்: ராணுவ வீரா்கள் உள்பட 13 போ் பலி

சிரியாவில் பேருந்து மீது திங்கள்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 11 ராணுவ வீரா்கள் உள்பட 13 போ் பலியாகினா்.

Updated On : 21 ஜூன், 2022 at 4:17 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:05 PM

சிரியாவில் பேருந்து மீது திங்கள்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 11 ராணுவ வீரா்கள் உள்பட 13 போ் பலியாகினா்.

இதுகுறித்து சிரியா அரசு செய்தி நிறுவனமான ‘சனா’ தெரிவித்திருப்பதாவது:

வடக்கு சிரியாவில் ரக்கா மாகாணத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. மத்திய மாகாணத்தில் உள்ள ஹோம்ஸ் என்ற பகுதிக்கு அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட தாக்குதலில் 11 ராணுவ வீரா்களும், பொதுமக்கள் இருவரும் உயிரிழந்தனா். ராணுவ வீரா்கள் மூவா் காயமடைந்தனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இதன் பின்னணியில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சம்பவம் நடைபெற்ற பகுதி முன்னா் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. சிரியாவில் ஐ.எஸ். அமைப்பு பலவீனமடைந்து விட்டாலும், கிழக்கு, வடக்கு, மத்திய சிரியாவில் அந்த அமைப்பு இதுபோன்ற தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.