உலகம்

மின்னணு கார் சோதனை ஓட்டத்தில் விபரீதம்: 2 பேர் பலி

சீனாவில் சோதனை ஓட்டத்தின்போது மின்னணு கார் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தாதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

DIN

சீனாவில் சோதனை ஓட்டத்தின்போது மின்னணு கார் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தாதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் மின்னணு கார்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை இடம் அமைந்துள்ளது. இங்கு மூன்றாவது தளத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மின்னணு கார்களின் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. 

அந்தவகையில் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த மின்னணு கார் சோதனை ஓட்டத்தின்போது, கார் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மூன்றாவது மாடியிலிருந்து கார் தவறி கீழே விழுந்தது. 

இதில், கார் ஓட்டுநர் உள்பட இருவர் உயிரிழந்தனர். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், விபத்து நடந்தது குறித்து விளக்கம் அளித்துள்ள மின்னணு கார் தயாரிப்பு நிறுவனம், விபத்துக்கான காரணம் கார் இல்லை எனத் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக பொது பாதுகாப்புத் துறையுடன் இணைந்து நிறுவனம் சார்பில் விசாரணை நடத்தப்படுகிறது. விபத்து எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவிகள் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிப் பறிப்பு தீர்மானத்துக்கு முழு ஆதரவு! - மம்தா

பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம்! - முதல்வர் ஸ்டாலின்

சபரிமலை தங்கக் கவச முறைகேடு: அமைச்சர் பதவி விலகக் கோரி பாஜக போராட்டம்!

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகல்! | செய்திகள் : சில வரிகளில் | 3.2.26

மேன்கைண்ட் பார்மா லாபம் ரூ.414 கோடியாக அதிகரிப்பு!

SCROLL FOR NEXT