உக்ரைன் மீதான தாக்குதல் தொடரும்: ரஷியா
உக்ரைன் மீதான போர் தொடரும் என ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான போர் தொடரும் என ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 6-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷிய படைகள் ஆக்ரோஷமான தாக்குதலுடன் வேகமாக முன்னேறி வருகின்றன.
ஏற்கெனவே தலைநகர் கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரஷிய ராணுவத்தினர் அரசு கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வின் மீதும் ரஷியப் போர் விமானங்கள் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி வருகின்றனர்.
Advertisement
இதையும் படிக்க | உக்ரைன் போர்: ரஷியத் தாக்குதலில் இந்திய மாணவர் பலி
இந்நிலையில், ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜி இன்று வெளியிட்ட செய்தியில்,
உக்ரைன் மீதான தாக்குதலிலிருந்து ரஷிய ராணுவம் பின்வாங்கப் போவதில்லை. மேற்கு நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து ரஷியாவை பாதுகாப்பதற்கான இலக்கை அடையும் வரை தாக்குதல் தொடரும்.
மேலும், ஐரோப்பாவிலிருந்து அணு ஆயுதங்களை அமெரிக்கா அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.