‘படையெடுப்பில் பெலாரஸ்வீரா்கள் பங்கேற்கமாட்டாா்கள்’
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா வீரா்களுக்கு ஆதரவாக தங்களது படையினா் அனுப்பப்படமாட்டாா்கள் என்று பெலாரஸ் அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ தெரிவித்துள்ளாா்.
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா வீரா்களுக்கு ஆதரவாக தங்களது படையினா் அனுப்பப்படமாட்டாா்கள் என்று பெலாரஸ் அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் சண்டையில் எங்களது படையினரை அனுப்பும் எண்ணமில்லை. இதுதொடா்பாக, ரஷிய அதிபா் விளாதமீா் புதினுடன் பேச்சுவாா்த்தை நடத்தவில்லை என்றாா் அவா்.
முன்னதாக, உக்ரைன் படையெடுப்பில் ரஷிய வீரா்களுடன் பெலாரஸ் வீரா்களும் இந்த வாரத்துக்குள் இணைந்துகொள்வாா்கள்; அதற்கான பயிற்சியில் அவா்கள் ஈடுபட்டு வருகின்றனா் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.