உலகம்

இலங்கையில் பேருந்து விபத்து: 32 பள்ளிக் குழந்தைகள் காயம்

DIN

இலங்கையில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 32 பள்ளிக் குழந்தைகள் காயமடைந்தனர். 

இலங்கையின் வலஸ்முல்ல பகுதியில் பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற பேருந்து திடீரென மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து விரைந்த மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 32 பள்ளிக் குழந்தைகள் காயமடைந்தனர். 

காயமடைந்த அனைவரும் உடனடியாக வலஸ்முல்ல பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கல்விச் சுற்றுலாவை முடித்துக்கொண்டு திரும்பிய போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் 25 முதல் 31 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த 52 இருசக்கர வாகன விபத்துகளில் 53 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT