உக்ரைன் போரில் இதுவரை 115 குழந்தைகள் பலி 
உலகம்

உக்ரைன் போரில் இதுவரை 115 குழந்தைகள் பலி

உக்ரைனில் ரஷிய ராணுவம் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 115 குழந்தைகள் உயிரிழந்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

DIN

உக்ரைனில் ரஷிய ராணுவம் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 115 குழந்தைகள் உயிரிழந்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 140க்கும் அதிகமான குழந்தைகள் படுகாயம் அடந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

நோட்டோ படையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வரும் தாக்குதலில், ரஷியாவின் தலைநகர் கீவ், கார்கீவ், துறைமுக நகரமான மரியுபோல் உள்ளிட்ட நகரங்களை ரஷிய ராணுவம் ஆக்கிரமித்துள்ளது.

உக்ரைனை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். இருந்தபோதிலும் அரசுக் கட்டடங்கள், விடுதிகள், திரையரங்குகள் என்று மக்கள் கூடியுள்ள இடங்களை நோக்கி ரஷிய ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். 

உக்ரைன் ராணுவத்தினரும் ரஷிய ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ரஷிய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 115 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனைச் சேர்ந்த 140க்கும் அதிகமான சிறுவர், சிறுமியர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போரில் பங்கேற்றவர்கள் அல்ல. உக்ரைனில் பல்வேறு குடும்பங்களின் துன்பநிலையையும், உக்ரைனின் துயரத்தையும் இது காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT