உலகம்

உக்ரைன் போர்: கடும் சேதத்தைச் சந்தித்த மரியுபோல் நகரம்

DIN

ரஷியப் படைகளின் தாக்குதலால் உக்ரைனின்  மரியுபோல் நகரம் கடுமையான சேதத்தை அடைந்துள்ளது.

ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக தொடரும் இந்த போரில் ராணுவ வீரர்கள், மக்கள் என ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

உக்ரைனின் பல்வேறு முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷியப் படைகள் தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

மேலும், போரிலிருந்து பின்வாங்குவதில்லை என புதின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரஷியப் படைகளின் கடும் தாக்குதலால் உக்ரைனின்  மரியுபோல் நகரம் மோசமான சேதத்தை அடைந்துள்ளதாக உக்ரைன் கலாச்சாரத் துறை அமைச்சகம் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், போர் தாக்குதலில் நகரின் பல கட்டடங்கள் சேதமாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT