கோப்புப்படம் 
உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 48 கோடியாக அதிகரிப்பு!

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 61.4 லட்சமாக அதிகரித்துள்ளது. 

DIN

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 61.4 லட்சமாக அதிகரித்துள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது சற்று குறைந்த வண்ணம் இருப்பது மக்களிடையே நிம்மதியை அளித்து வந்த நிலையில், சில நாள்களாக மீண்டு தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொற்று தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும், உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 48,00,15,117 -ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 61,43,137 போ் உயிரிழந்துள்ளனர். 

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 41,42,36,013 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 5,96,35,967 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 59,689 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 8,16,00,890    -ஆகவும் பலி எண்ணிக்‍கை 10,03,198 ஆகவும் உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 4,30,14,687 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,20,885 பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,98,02,257 ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 6,58,626    பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை செலுத்தப்பட்டகரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10,86,03,11,810 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணையவழி மோசடி: குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் அறிவுறுத்தல்

நோய்களைக் காட்டிலும் சிகிச்சைகள் கடுமையாக இருக்கக் கூடாது: மக்களவை உறுப்பினா் டாக்டா் மஞ்சுநாத்

புதிய ரக பப்பாளி சாகுபடியில் அதிக விளைச்சலை ஈட்டும் விவசாயி!

‘நிறைவடையும் தருவாயில் இந்தியா- அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்’

எம்&எம் விற்பனை 26% உயர்வு

SCROLL FOR NEXT