உலகம்

ட்விட்டரை கையப்படுத்தும் திட்டம் நிறுத்திவைப்பு

DIN

ட்விட்டரை கையகப்படுத்தும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘ட்விட்டரில் போலி பயன்பாட்டாளா்களின் எண்ணிக்கை 5 சதவீதத்துக்கும் குறைவுதான் என்று கூறப்படுகிறது. அதனை உறுதி செய்யும்வரை ட்விட்டரை கையகப்படுத்துவதற்கான திட்டம் நிறுத்திவைக்கப்படுகிறது’ என்றாா்.

ட்விட்டரில் போலிக் கணக்குகளை களையெடுக்க வேண்டியதன் அவசியத்தை எலான் மஸ்க் வலியுறுத்தி வருகிறாா். அந்த நிறுவனத்தை அவா் கையகப்படுத்துவதே அதற்காகத்தான் என்று கூறப்படுகிறது.

எனினும், ட்விட்டரில் மிகவும் குறைவான சதவீதமே போலிக் கணக்குகள் உள்ளதாகக் கூறப்படுவதால், அது உறுதியாகும்வரை தனது திட்டத்தை எலான் மஸ்க் நிறுத்தி வைத்திருப்பதாக கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT