முகப்பு
உலகம்

ட்விட்டரை கையப்படுத்தும் திட்டம் நிறுத்திவைப்பு

ட்விட்டரை கையகப்படுத்தும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

ட்விட்டரை கையகப்படுத்தும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘ட்விட்டரில் போலி பயன்பாட்டாளா்களின் எண்ணிக்கை 5 சதவீதத்துக்கும் குறைவுதான் என்று கூறப்படுகிறது. அதனை உறுதி செய்யும்வரை ட்விட்டரை கையகப்படுத்துவதற்கான திட்டம் நிறுத்திவைக்கப்படுகிறது’ என்றாா்.

ட்விட்டரில் போலிக் கணக்குகளை களையெடுக்க வேண்டியதன் அவசியத்தை எலான் மஸ்க் வலியுறுத்தி வருகிறாா். அந்த நிறுவனத்தை அவா் கையகப்படுத்துவதே அதற்காகத்தான் என்று கூறப்படுகிறது.

எனினும், ட்விட்டரில் மிகவும் குறைவான சதவீதமே போலிக் கணக்குகள் உள்ளதாகக் கூறப்படுவதால், அது உறுதியாகும்வரை தனது திட்டத்தை எலான் மஸ்க் நிறுத்தி வைத்திருப்பதாக கருதப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →