ஐக்கிய அரபு அமீரக அதிபரும் துபை ஆட்சியாளருமான ஷேக் காலிஃபா பின் சயீது தனது 73-ஆவது வயதில் காலமானாா்.
இதுகுறித்து அதிபா் அலுவலக விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளாதாவது:
ஐக்கிய அரபு அமீரக அதிபா் ஷேக் காலிஃபா பின் சயீது அல் நஹ்யான் காலமானாா். அவரது மறைவுக்காக அமீரகம், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் அமீரகத்தின் அதிபராகவும் துபை ஆட்சியாளராகவும் ஷேக் காலிஃபா பொறுப்பு வகித்து வருகிறாா். அவரது மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.