முகப்பு
உலகம்

ஐ.நா உதவிக்குழுவின் பெண் ஊழியர்களும் ஹிஜாப் அணிய வேண்டும்: தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவிக்குழுவில் பணியாற்றும் பெண் ஊழியர்களும் ஹிஜாப் அணிய வேண்டும் என தலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Updated On : 18 மே 2022, 12:44 pm IST
பகிர்:

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவிக்குழுவில் பணியாற்றும் பெண் ஊழியர்களும் இனி கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என தலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்த பின் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக, பெண்கள் பணிக்குச் செல்லக்கூடாது என்றும் அவர்கள் உயர்கல்வியைத் தொடர்க்கூடாது எனவும் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்து சர்ச்சையை ஏற்படுத்தினர்.

முன்னதாக, ஆப்கனில் பணிபுரியும் அனைத்துப் பெண்களும் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில் தற்போது, ஆப்கனில் உள்ள ஐக்கிய நாடுகளின் உதவிக்குழுவில் பணியாற்றும் பெண் ஊழியர்களும் இனி கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இதுகுறித்து வெளியான செய்திக் குறிப்பில் “எந்தப் பெண் ஊழியராவது ஹிஜாப் அணியாமல் இருந்தால் அவர்களிடம் கட்டாயம் இதை அணிய வேண்டும் என  ‘கண்ணியமான’ முறையில் எடுத்துச் சொல்லப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments