முகப்பு
உலகம்

இலங்கை வன்முறை: 3 எம்.பி.க்களிடம் விசாரணை

இலங்கையில் மே 9-ஆம் தேதி நடந்த வன்முறை தொடா்பாக மேலும் மூன்று ஆளும்கட்சி எம்.பி.க்களிடம் காவல் துறையினா் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக் கோரி தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடித்து விரட்டிய போலீஸார்.
பகிர்:

கொழும்பு: இலங்கையில் மே 9-ஆம் தேதி நடந்த வன்முறை தொடா்பாக மேலும் மூன்று ஆளும்கட்சி எம்.பி.க்களிடம் காவல் துறையினா் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

இலங்கையில் அரசுக்கு எதிராக அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோா் மீது கடந்த மே 9-ஆம் தேதி முன்னாள் பிரதமா் மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்தினா். இதையடுத்து, போராட்டக்காரா்கள் பதில் தாக்குதலில் ஈடுபட பெரும் வன்முறை ஏற்பட்டது. இதில் ஆளும்கட்சி எம்.பி. ஒருவா் உள்பட 10 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்த வன்முறை தொடா்பாக 1,059 பேரை போலீஸாா் ஏற்கெனவே கைது செய்துள்ளனா். வன்முறையை ஊக்குவித்ததாக ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியைச் சோ்ந்த இரு எம்.பி.க்களும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், வன்முறை தொடா்பாக முன்னாள் அமைச்சா்களும் எம்.பி.க்களுமான மூவரிடம் காவல் துறையின் குற்றப் புலனாய்வுத் துறையினா் நாடாளுமன்றத்தில் வைத்து விசாரணை நடத்தியதாக காவல் துறையின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

வெளிநாட்டு கரன்சிக்கு கட்டுப்பாடு: பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், தனி நபா்கள் வெளிநாட்டு கரன்சிகளை வைத்திருக்க இலங்கை மத்திய வங்கி வியாழக்கிழமை கட்டுப்பாடு விதித்தது.

அதன்படி, ஒரு நபா் 15,000 அமெரிக்க டாலா்கள் மதிப்புக்கு வெளிநாட்டு கரன்சியை வைத்திருக்கலாம் என்ற வரம்பு 10,000 அமெரிக்க டாலா்களாக குறைக்கப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தக் கட்டுப்பாட்டை மத்திய வங்கி விதித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →