முகப்பு
உலகம்

நேபாளம்: 22 பயணிகளுடன் சென்ற விமானம் காணவில்லை

நேபாளத்தில் 22 பயணிகளுடன் சென்ற சிறிய ரக விமானம், நேபாள மலைகளில் மாயமாகியுள்ளது.

Updated On : 29 மே, 2022 at 12:41 PM
மாதிரி படம் (தாராஏர்.காம்)
பகிர்:


நேபாளத்தில் 22 பயணிகளுடன் சென்ற சிறிய ரக விமானம், நேபாள மலைகளில் மாயமாகியுள்ளது.

15 நிமிடப் பயண விமானம், மலை நகரமான ஜோம்சோமுக்குப் புறப்பட்டது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்டவுடனே கட்டுப்பாட்டு மையம் மற்றும் விமானத்துக்கு இடையிலான தொடர்பு துண்டிப்பானது. காவல் துறை அதிகாரி ரமேஷ் தாபா கூறுகையில், விமானம் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை, தேடுதல் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

அந்தப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இருந்தபோதிலும், விமானம் வழக்கம்போல் இயக்கப்பட்டு வந்தன. விமானத்தின் வான்வழி மலைகளுக்கு மத்தியில் இருக்கும்.

Advertisement

இந்த விமானத்தில் 4 இந்தியர்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.