உலகம்

முதல் உலகப் போரின் கையெறி குண்டு: கடற்கரையில் கண்டெடுத்த சிறுவன்

DIN

முதல் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிக்கும் திறன் கொண்ட கையெறி வெடிகுண்டை வடக்கு அயர்லாந்து கடற்கரையில் இருந்து சிறுவன் ஒருவன் கண்டெடுத்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளார்.

சிறுவன் ஒருவன் கடற்கரைக்கு சென்றபோது அங்கிருந்து வெடிகுண்டு ஒன்றினை கண்டெடுத்துள்ளார். உடனடியாக அந்த வெடிகுண்டு குறித்து காவல் துறையிடம் தகவல் தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து, அந்த வெடிகுண்டு அனுபவமிக்க ராணுவ அதிகாரிகளால் செயலிழக்க செய்யப்பட்டது.

இது குறித்து காவல்துறையினர் முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “ இந்த வெடிகுண்டை கண்டெடுத்தவுடன் உடனடியாக காவல் துறையிடம் சிறுவன் தகவல் அளித்துள்ளார். இந்த வெடிகுண்டு வெடிக்கும் திறன் கொண்டது.  இந்த வெடிகுண்டை அனுபவமிக்க ராணுவ அதிகாரிகள் சோதித்து திறம்பட செயலிழக்கச் செய்தனர். மேலும், இந்த வெடிகுண்டு முதல் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது என்பதையும் உறுதி செய்தனர். வெடிகுண்டை கண்டெடுத்தவுடன் சிறுவன் உடனடியாக தகவல் கொடுத்ததால் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. அந்த சிறுவனுக்கு மிகப்பெரிய நன்றி.” எனப் பதிவிட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT