முகப்பு
உலகம்

தான்சானியா விமானம் ஏரியில் விழுந்து விபத்து: 19 பேர் பலி!

தான்சானியாவில் 43 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 

Updated On : 6 நவம்பர் 2022, 10:51 pm IST
பகிர்:


தான்சானியாவில் 43 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 

கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் உள்ள டார் எஸ் சலாம் நகரிலிருந்து புகோபா நகரை நோக்கி 39 பயணிகள், 2 விமானிகள் மற்றும் இரண்டு கேபின் பணியாளர்கள் உள்பட 43 பேர் சென்ற விமானம் சுமார் 100 மீட்டர் (328 அடி) உயரத்தில் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது சிக்கலை எதிர்கொண்ட நிலையில், மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்கும்போது விமானம் விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மீட்பு குழுவினர்.

Advertisement

Advertisement

இதில், 26 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மீட்கப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

விமானம் ஏரியில் விழுந்ததை அடுத்து மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் படங்கள் மற்றும் விடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments