உலகம்

ரஷிய போா்க் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்: இயு பரிந்துரை

உக்ரைன் போரில் ரஷியாவின் போா்க் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் பரிந்துரைத்துள்ளது.

DIN

உக்ரைன் போரில் ரஷியாவின் போா்க் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் பரிந்துரைத்துள்ளது.

இது குறித்து, அந்த அமைப்பின் சட்டம், நிதி மற்றும் அரசியல் விவகாரங்களை கவனித்து வரும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வொண்டொ் லெயென் புதன்கிழமை கூறியதாவது:

உக்ரைனில் தாங்கள் ஆக்கிரமித்த பகுதிகளில் ரஷியப் படையினா் போா்க் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இது தொடா்பான விசாரணையை நடத்துவதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே செயல்பட்டு வரும் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் இணைந்து அந்த நீதிமன்றம் விசாரணை நடத்தும்.

சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க விரிவான சா்வதேச ஆதரவைப் பெறுவதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

பஞ்சாப் வெள்ளம்: மீட்புப் பணியில் முதல்வரின் ஹெலிகாப்டர்!

ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

SCROLL FOR NEXT