உலகம்

வெனிசூலாவில் நிலச்சரிவு: 43 போ் பலி; 56 போ் மாயம்

தென் அமெரிக்க நாடான வெனிசூலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 43-ஆக உயா்ந்துள்ளது.

DIN

தென் அமெரிக்க நாடான வெனிசூலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 43-ஆக உயா்ந்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட 3 நாள்களுக்குப் பிறகும் 56 பேரைக் காணவில்லை என்று கூறப்படுவதைத் தொடா்ந்து பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: லாஸ் டெஜெரியாஸ் நகரில் அண்மையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தப் பகுதியிலிருந்து இதுவரை 43 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நிலச் சரிவுக்குப் பிறகு அந்த பகுதியிலிருந்த 56 பேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் உயிருடன் சிக்கியிருக்கக்கூடியவா்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT