உலகம்

துருக்கியில் காட்டுத் தீ: 1000 பேர் வெளியேற்றம்!

DIN

தெற்கு துருக்கியில் இரண்டாவது நாளாகக் காட்டுத் தீ பரவி வருவதால், அங்குள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். 

மத்திய தரைக்கடல் கடலோர மாகாணமான மெர்சினில் உள்ள குல்னார் மாவட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தானது அருகிலுள்ள சிலிப்கே மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும் தீ பரவியது. 

துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரக்கால மேலாண்மை நிறுவனத்தின் படி, 

சம்பவ இடத்தில் 29 நீர் இறக்கும் ஹெலிகாப்டர்கள், 11 விமானங்கள் மற்றும் சுமார் 850 பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கணக்கான வீடுகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். தீ விபத்தில் சிக்கி 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மெர்சினின் அருகிலுள்ள மாகாணமான அன்டல்யாவுடன் இணைக்கும் நெடுஞ்சாலையும் முன்னெச்சரிக்கை காரணமாக மூடப்பட்ட நிலையில், வியாழனன்று மீண்டும் திறக்கப்பட்டது. 

கடந்த கோடையில், துருக்கியின் மத்திய தரைக்கடல் மற்றும் ஏஜியன் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடுமையான வெப்பம் வீசிய நிலையில் ஏற்பட்ட தீ விபத்தால் குறைந்தது 8 பேரும், எண்ணற்ற விலங்குகளும் பலியானது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT