அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 
உலகம்

உக்ரைனுக்கு ரூ. 4,790 கோடி ராணுவ உதவி: அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைனுக்கு 600 மில்லியன் டாலர்(4,790 கோடி ரூபாய்) ராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

DIN

உக்ரைனுக்கு 600 மில்லியன் டாலர்(4,790 கோடி ரூபாய்) ராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

நேட்டோவில் உறுப்பினராக உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 6 மாதங்களைக் கடந்து நீடித்து வருகிறது. 

உக்ரைனின் முக்கியமான பல நகரங்களைக் கைப்பற்றியுள்ள ரஷியா, தொடர் ஏவுகணைத் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. 

இதில், உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் நேரடியாக உதவ முடியாத சூழ்நிலையில், அமெரிக்கா உக்ரைனுக்கு தொடர்ந்து நிதி மற்றும் ராணுவ உதவி செய்து வருகிறது. 

இந்நிலையில், உக்ரைனுக்கு ரூ. 4,790 கோடி (600 மில்லியன் டாலர்) மதிப்பிலான ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

கூடுதல் வெடிமருந்துகள், பீரங்கி குண்டுகள் என ரூ. 4,790 கோடி மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT