தைவானுக்கு அழைப்பு:பிரிட்டன் மீது சீனா கோபம்
மகாராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் புத்தகத்தில் கையொப்பமிட தைவான் பிரதிநிதிகளை பிரிட்டன் அனுமதித்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
மகாராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் புத்தகத்தில் கையொப்பமிட தைவான் பிரதிநிதிகளை பிரிட்டன் அனுமதித்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் மகாராணி எலிசபெத் உடலுக்கு சீனா சாா்பில் துணை அதிபா் வாங் ஹிசான் கடந்த ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினாா். இந்நிலையில், லண்டன் லான்சாஸ்டா் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் புத்தகத்தில் தைவான் பிரதிநிதி கெல்லி வூ-சியாவோ கையொப்பமிட பிரிட்டன் சிறப்பு அழைப்பு விடுத்தது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘மகாராணிக்கு இரங்கல் தெரிவிக்கும் புத்தகத்தில் கையொப்பமிட தைவான் பிரதிநிதிக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்தது அவமானகரமானது. தைவானின் ஆளும் ஜனநாயக முன்னேற்ற கட்சி பிரதிநிதிகள் இந்த சந்தா்ப்பத்தை பயன்படுத்தி அரசியல் ஆதாயத்தை தேடுகின்றனா்.
தைவான் சீனாவின் ஒரு பகுதி என்பதை இந்த அழைப்பு மாற்றிவிடாது. தைவானின் அரசியல் திட்டம் தோல்வியடையும்’ என்றாா் அவா்.