முகப்பு
உலகம்

படையைத் திரட்ட ரஷிய அதிபர் புதின் அதிரடி உத்தரவு

உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் நோக்கத்தில் ரஷியாவில் படைகளை திரட்டுமாறு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 21 செப்டம்பர், 2022 at 1:11 PM
விளாதிமீா் புதின்
பகிர்:

உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் நோக்கத்தில் ரஷியாவில் படைகளை திரட்டுமாறு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே ராணுவப் பயிற்சி பெற்று வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ள போரிடும் உடல் தகுதியுள்ளவர்களையும் திரட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றி, படையில் இருந்து விலகி வேறு பணிகளில் உள்ளோரையும் திரட்ட புதின் உத்தரவிட்டுள்ளார்.

ரஷியாவை பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி, இறுதியில் அழித்துவிட மேற்கு நாடுகள் சதிசெய்வதாக அதிபர் புதின் புகார் அளித்துள்ளார்.

Advertisement

ரஷியாவின் இறையாண்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், போரை முடிவுக்கு கொண்டுவர அமைதிப் பேச்சை தொடங்க விடாமல் உக்ரைனை மேற்கு நாடுகள் தடுப்பதாக புதின் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.