முகப்பு
உலகம்

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டடத்தை தாக்கியது ரஷியா

உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகத்தை ரஷியப் படைகள் தாக்கியது.

Updated On : 24 பிப்ரவரி, 2022 at 5:18 PM
தாக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டடம்(படம் : டிவிட்டர்)
பகிர்:

உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகத்தை ரஷியப் படைகள் தாக்கியது.

உலக நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது போர்த்தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

ரஷியா - உக்ரைன் போர் குறித்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பல கவலை தெரிவித்துள்ளன. ஐ.நா.வும் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

இந்நிலையில், ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட உக்ரைன் ராணுவத்தினர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை தலைமையகத்தை ரஷிய படைகள் தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.