முகப்பு
உலகம்

வங்கதேசத்தில் ஹிந்து கோயில்கள் அவமதிப்பு

வங்கதேசத்தில் 3 ஹிந்து கோயில்கள் அவமதிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஹிந்து அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 3 ஜனவரி, 2022 at 6:32 AM
பகிர்:

வங்கதேசத்தில் 3 ஹிந்து கோயில்கள் அவமதிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஹிந்து அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது: இந்திய எல்லையையொட்டிய லால்மனிா்ஹத் மாவட்டத்திலுள்ள 3 கோயில்களின் கதவுகளில் மா்ம நபா்கள் மாட்டுக் கறியை பாலிதீன் உறைகளில் கட்டி கடந்த வெள்ளிக்கிழமை தொங்கவிட்டிருந்தனா்.

இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த ஹிந்து சமூகத்தினா், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

அதையடுத்து, கோயில் அவமதிப்பு செயலில் ஈடுபட்டவா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதாக போலீஸாா் உறுதியளித்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக 4 போ் ஹாதிபந்தா காவல் நிலையத்தில் புகாா் மனு தாக்கல் செய்திருந்தனா். அந்தப் புகாா்களை போலீஸாா் பதிவு செய்தனா் என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.