china094855 
உலகம்

வெள்ளத்தில் தத்தளிக்கும் பெய்ஜிங்: 140 ஆண்டுகளில் இல்லாத கனமழை!

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

DIN

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

கடந்த சில நாள்களாக தலைநகர் பெய்ஜிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல வீடுகள் அடித்து செல்லப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

கனமழைக்கு இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 27 பேர் காணாமல் போயுள்ளனர். பெய்ஜிங் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 744.8 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென் சீன மாகாணங்களை தாக்கிய டோக்சுரி சூறாவளி, வடக்கு நோக்கி நகர்ந்துள்ளதால் வட சீனத்தில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

முக்கிய ஆறுகளில் தண்ணீர் அபாய அளவை விட தாண்டியுள்ளதால், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியடைய 5 முக்கிய காரணங்கள்!

பாகிஸ்தானில் இந்தோனேசிய அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

ரன்வீர் சிங் காட்டில் மழை..! 3 நாளில் துரந்தர் பட வசூல் இவ்வளவா?

சென்னை, வடதமிழகத்தில் குளிர் அலை உருவாகும்! எப்படி இருக்கப்போகிறது?

அழகின் ரகசியம் என்ன? - பாலிவுட் நடிகை மாதுரி தீக்‌ஷித் பதில்!

SCROLL FOR NEXT