உலகம்

வெள்ளத்தில் தத்தளிக்கும் நார்வே!

நார்வேயில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் நாட்டின் பல பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. 

DIN

நார்வேயில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் நாட்டின் பல பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. 

தொடர் கனமழையால் நாட்டின் பல இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் மக்கள் அவர்களது இருப்பிடத்தை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வாகனங்கள் மேடான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பாலங்களில் போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கனமழை தொடர்வதால் ஆறுகள் நிரம்பி அருகிலுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுவரை கனமழைக்கு எந்த ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை. நார்வேயில் உள்ள அணைகளின் நிலையை அந்நாட்டு அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. 

நார்வே மக்கள் அடுத்த சில நாள்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ஓட்டுநா் மதிப்பீட்டு முறை: சென்னை ஐஐடி ஒப்பந்தம்

அமெரிக்கா: தமிழக காலநிலை விஞ்ஞானிக்கு ‘கிராஃபூா்ட்’ பரிசு

SCROLL FOR NEXT