உலகம்

ஈபிள் கோபுரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: உடனடியாக வெளியேற்றப்பட்ட பார்வையாளர்கள்!

ஈபிள் கோபுரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து கோபுரத்தின் மூன்று தளங்களில் உள்ள பார்வையாளர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

DIN

ஈபிள் கோபுரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து கோபுரத்தின் மூன்று தளங்களில் உள்ள பார்வையாளர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

ஈபிள் கோபுரம் மத்திய பிரான்ஸில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற  சின்னங்களுள் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் அதிக அளவிலான பார்வையாளர்கள் வருகை புரிவது வழக்கம். கடந்த ஆண்டு ஈபிள் கோபுரத்துக்கு 62  லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். 

இந்த நிலையில், ஈபிள் கோபுரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து கோபுரத்தின் மூன்று தளங்களில் உள்ள பார்வையாளர்கள் அனைவரும் அவசர அவசரமாக இன்று வெளியேற்றப்பட்டது சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஈபிள் கோபுர பராமரிப்பு அதிகாரிகள் சார்பில் கூறியதாவது: வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு இருக்கிறதா என சோதனை நடத்தினர். இதுபோன்ற தருணங்களில் இந்த மாதிரியான சோதனைகள் வழக்கமாக நடைபெறுவதுதான். இது போன்ற சோதனைகள் ஈபிள் கோபுரத்தில் நடத்தப்படும் சூழல் அமைவது மிக அரிதான நிகழ்வே. ஈபிள் கோபுரத்தின் மூன்று தளங்களில் உள்ள பார்வையார்களும் மிரட்டலைத் தொடர்ந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர் என்றனர்.

ஈபிள் கோபுர கட்டுமானப் பணிகள் 1887 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டு மார்ச் 31, 1889 ஆம் ஆண்டு கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவ. 25ல் திருப்பூரில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! - இபிஎஸ் அறிவிப்பு

7 விக்கெட்டுகள் வீழ்த்தி மிட்செல் ஸ்டார்க் மிரட்டல்.! 172 ரன்களில் சரணடைந்த இங்கிலாந்து!

மன்னாா்குடியில் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் புதிய அரசு மகளிா் கல்லூரி தொடக்கம்: அதிருப்தியில் பெற்றோா், மாணவிகள்!

தமிழகத்தில் மிக கனமழை, அதி கனமழைக்கு வாய்ப்பில்லை!

தெய்வ தரிசனம்... பாவங்கள் நீங்கி இன்பமுடன் வாழ திருச்சுழியல் திருமேனிநாதர்!

SCROLL FOR NEXT