உலகம்

மணிலாவில் தீ விபத்து: 15 பேர் பலி!

மணிலாவில் கியூசான் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலியானதாக பிலிப்பின்ஸின் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். 

DIN

மணிலாவில் கியூசான் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலியானதாக பிலிப்பின்ஸின் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். 

தலைநகரின் கியூசான் நகரில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வீட்டிலிருந்த 15 பேர் தீயில் கருகி பலியாகினர். மேலும் மூவர் உயிர்த்தப்பினர். 

தீ விபத்தில் பலியானவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வீட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆவார். 

திடீரென தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

விஜய் இப்போது நடிகர் அல்ல: அருண் ராஜ்

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

SCROLL FOR NEXT