கெய்ர்ன்ஸில் வெள்ளத்தில் சிக்கியவர்களை விசைப்படகில் மீட்கும் குழுவினர் / ஏபி 
உலகம்

வடகிழக்கு ஆஸ்திரேலியாவில் மழை - வெள்ளம்! 300 பேர் மீட்பு!

ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் நேரிட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 300-க்கும் மேற்பட்டோர் இரவிலேயே மீட்கப்பட்டனர்.

DIN

பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் நேரிட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 300-க்கும் மேற்பட்டோர் இரவிலேயே மீட்கப்பட்டனர். இவர்களில் பலர் வெள்ளத்தில் சிக்காமல் இருப்பதற்காகக் கட்டடங்களின் மேற்கூரைகளில் ஏறித் தப்பினர்.

வெள்ளப் பெருக்கு காரணமாக கெய்ர்ன்ஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. சுமார் 1.60 லட்சம் பேர் வசிக்கும் இந்த நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு நேரிடும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

கெய்ர்ன்ஸ் விமான நிலையத்தில் வெள்ளத்தில் சிக்கிய விமானங்கள் / ஏபி

கெய்ர்ன்ஸ் நகரில் மழை குறைந்தபோதிலும் அருகிலுள்ள போர்ட் டக்ளஸ், டெயின்ட்ரீ, குக்டவுன், வுஜல்வுஜல் மற்றும் ஹோப் வேலி ஆகிய பகுதிகளுக்கு மழை – வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரவு மிகவும் மோசமானதாக, சவாலுக்குரியதாக இருந்தது. சுமார் 300-க்கும் மேற்பட்டோரை மீட்டோம் என்று குயின்ஸ்லாந்து காவல் ஆணையர் காதரினா கரோல் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட சாலை / ஏபி

இந்தப் பகுதிகளை இரு புயல்கள் கடந்துசென்றபோதிலும் பலத்த காற்று காரணமாக லேசான பாதிப்புகளே நேரிட்டது. எனினும், பலத்த மழை – வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

சாலைகள், ரயில் பாதைகள் துண்டிக்கப்பட்டன. பல குடியிருப்புப் பகுதிகள் தொடர்பு இழந்தன. 14 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

காந்தா டிரைலர் அறிவிப்பு விடியோ!

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

SCROLL FOR NEXT